Thursday, February 03, 2005

திசைகள் - செல்லினம் தொடர்பான நேர்காணல்


பிப்ரவரி மாத திசைகள் இதழ் வழக்கம் போல் பல சுவையான படைப்புகளுடன் வெளிவந்துள்ளது. அதில், செல்லினம் தொடர்பான நேர்காணல் ஒன்றும் இடம்பெற்றுள்ளது.

செல்லின வெளியீட்டைப் பாராட்டி, பேராசிரியர் ஆணந்தகிருஷ்ணன் அவர்கள் ஒரு செய்தியையும் வழங்கி இருக்கிறார்கள்.

செல்லினம் என்ற பெயரை சூட்டுவதற்குமுன் "முரசு அஞ்சல் செல்பேசிப் பதிப்பு" என்ற நீண்ட ஒரு வரியைக் கொண்டு இந்த செயலித் தொகுப்பை அழைத்து வந்தோம். தமிழ் வரிகளை செல்பேசியில் கோர்க்கும் வசதியை உருவாக்கியவுடனேயே அது தொடர்பான கட்டுரைகளை திசைகளுக்கு அனுப்பி வைத்தோம் - திசைகள் ஆசிரியர் திரு மாலன் அவற்றை வெளியிட்டு ஊக்கம் கொடுத்தார்கள். இந்தக் கட்டுரைகளில் ஒன்றில்தான் அஞ்சல் தமிழ் விசைமுகம் "Anjal Tamil Keypad" எப்படி இயங்குகிறது என்ற தகவலையும் கொடுத்திருந்தோம். அந்த விசைமுக அமைப்புதான் இன்றைய செல்லினத்திலும் இயங்குகின்றது.

காண்க: http://www.thisaigal.com

0 Comments:

Post a Comment

<< Home