Thursday, January 20, 2005

எங்கள் ஊரில் எப்போது கிடைக்கும்?


செல்லினம் வெளியாகி சில நாட்களே ஆனது. சிங்கப்பூரில் உள்ள வானொலி தொலைக்காட்சி ஊடகங்களோடு மலேசிய நாளேடுகளும் மிகப் பெரிய அளவில் செய்திகளை வெளியிட்டு இந்த வட்டாரத் தமிழரின் ஆவலை பெருமளவு தூண்டியுள்ளனர்.

செல்லினத்தை உருவாக்க 18 மாத காலம் பிடித்தது. இதில் தொழில்நுட்ப உருவாக்கம் மட்டும் அல்ல, செல்பேசி நிறுவனங்களோடு கலந்தாலோசித்தக் காலமும் அடங்கும்.

வெள்ளோட்டம் இட்டதும் எங்களுக்கு இருக்கும் முதல் கடமை, பயனாளர்களின் தேவையை பூர்த்தி செய்வதுதான். முதல் முதலில் தமிழ் மின்-அஞ்சல் சேவையை வெளியிட்ட காலத்தில் எங்களின் வேலை சற்று சுலபமாகவே இருந்தது. காரணம் அந்த காலத்தில் முரசு அஞ்சல் செயலியைப் பயன்படுத்தத் தொடங்கியவர்கள் பெரும்பாலோர் கணினி தொழில்நுட்பத்தை அறிந்தவர்கள்.

செல்லினம் முற்றிலும் மாறுபட்ட பயனாளர் வட்டத்தை நாடுகிறது. இவர்களுக்கு உதவுவதையும் அவர்களிடம் இருந்து வரும் கருத்துகளை நேரடியாகச் சேகரிப்பதிலுமே எங்கள் நேரத்தை இப்போது செலவு செய்கின்றோம். இது அனவருக்கும் நல்லது. தொடக்கத்தில் இருந்த சிக்கல் இனி இருக்காது. வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, எங்கள் உதவி இல்லாமலேயே அனைவரும் இதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த வாய்பமையும்.

எனவேதான் இந்தத் தாமதம். விரைவில் உங்கள் ஊருக்கும் வருகிறோம்.

~ முத்து.

0 Comments:

Post a Comment

<< Home